நல்லூர் கந்தசுவாமி ஆலய சுற்றாடலில் வீதி தடை! யாழ்.மாநகரசபை ஆணையாளர் விடுத்துள்ள அறிவிப்பு...

ஆசிரியர் - Editor I
நல்லூர் கந்தசுவாமி ஆலய சுற்றாடலில் வீதி தடை! யாழ்.மாநகரசபை ஆணையாளர் விடுத்துள்ள அறிவிப்பு...

கந்த சஷ்டி விரத உற்சவத்தை முன்னிட்டு நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தை சூழவுள்ள வீதிகளில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (14) முதல் போக்குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாநகர சபை ஆணையாளர் த.ஜெயசீலன் அறிவித்துள்ளார்.

அதன்படி, ஆலயத்தை சூழவுள்ள வீதிகளில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (14) முதல் வெள்ளிக்கிழமை (17) வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரையிலான ஒரு மணிநேரமும், சனிக்கிழமை (18) சூர சம்ஹார நிகழ்வன்று பகல் 12 மணி முதல் இரவு 7 மணி வரையிலும், மறுநாள் ஞாயிற்றுக்கிழமை (19) மாலை 5 மணி முதல் 6 மணி வரையிலும் வீதி தடை போடப்பட்டு, அவ்வீதியின் ஊடான போக்குவரத்து தடை செய்யப்பட்டிருக்கும்.

எனவே, அந்த வீதியால் வாகனங்களில் பயணிப்போர், போக்குவரத்து தடை விதிக்கப்படும் நேரங்களில் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு ஆணையாளர் அறிவித்துள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு