மகன் உயிரை மாய்க்க முயன்றதை அறிந்த தந்தை உயிரிழப்பு! யாழ்.கோப்பாயில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
மகன் உயிரை மாய்க்க முயன்றதை அறிந்த தந்தை உயிரிழப்பு! யாழ்.கோப்பாயில் சம்பவம்..

தனது மகன் உயிர்மாய்க்க முயன்ற தகவல் அறிந்து மயங்கி சரிந்த தந்தை உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் - கோப்பாய் மத்தியை சேர்ந்த முத்துத்தம்பி விவேகானந்தன் (வயது 71) என்பவரே உயிரிழந்துள்ளார்.

இவரது இரண்டாவது மகன் நேற்றைய தினம் புதன்கிழமை தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்க்க முயன்ற நிலையில் காப்பாற்றப்பட்டு , 

யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனும் தகவலை வீட்டில் இருந்த நிலையில் அறிந்தவர் உடனே மயங்கி சரிந்துள்ளார்.

அதனை அடுத்து அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது , அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என வைத்தியர்கள் அறிக்கையிட்டனர்.

அதேவேளை தவறான முடிவெடுத்து சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மகன் யாழ்.போதனா வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு