வீதி முழுவதும் மணலைகொட்டி, தொலைத்தொடர்பு கம்பங்களை சேதப்படுத்தி மணல் கள்ளர்கள் அட்டகாசம்...

ஆசிரியர் - Editor I
வீதி முழுவதும் மணலைகொட்டி, தொலைத்தொடர்பு கம்பங்களை சேதப்படுத்தி மணல் கள்ளர்கள் அட்டகாசம்...

டிப்பரில் மணலை கடத்தியவர்கள் பொலிஸாரை கண்டுவிட்டு தப்பித்தோடியபோது வீதியிலேயே மணலை கொட்டி விட்டு சென்றதால்

வீதியோரமாக இருந்த தொலைத்தொடர்பு கம்பங்களையும் சேதமாக்கி தப்பி ஓடியுள்ளனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியின் சிறுப்பிட்டி பகுதியிலேயே இவ்வாறான நிலை இன்று அதிகாலை ஏற்பட்டது.

அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் டிப்பரில் மணல் கடத்தப்பட்ட போது பொலிஸார் வாகனத்தை மறித்துள்ளனர். இதனையடுத்து டிப்பரில் மணலை கடத்தியவர்கள் தப்பித்தோடியதுடன் வீதியிலேயே மணலை கொட்டி விட்டு சென்றனர்.

குறித்த வீதியால் பயணித்தவர்கள் வீதியோரமாக தமது போக்குவரத்தை  மேற்கொண்டதாக கூறப்படுகிறது்

சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கொட்டப்பட்ட மணலை வீதியில் இருந்து அகற்றி ஒரு சிலர் வீடுகளுக்கு கொண்டு செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு