யாழ்.கொட்டடி பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தென்னிலங்கையை சேர்ந்தவர் சடலமாக மீட்பு!

ஆசிரியர் - Editor I
யாழ்.கொட்டடி பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தென்னிலங்கையை சேர்ந்தவர் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் கொட்டடிப் பகுதியில் உள்ள தனியார் விடுதியில்  ஆணொருவர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

லால் பெரேரா என்கிற 61 வயதுடைய தென்னிலங்கையைச் சேர்ந்த சிங்கள மொழி பேசுபவரே உயிரிழந்துள்ளார்.

மூன்று நாட்களாக குறித்த விடுதியில் தங்கி இருந்தநிலையில் அறைக்கு வெளியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

விடுதி உரிமையாளரால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் பொலிசார் விசாரணைகளை  மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு