யாழ்.சண்டிலிப்பாயில் வழிப்பறி, முறைப்பாடு கொடுத்தும் நடவடிக்கை இல்லை என மக்கள் சாடல்...

ஆசிரியர் - Editor I
யாழ்.சண்டிலிப்பாயில் வழிப்பறி, முறைப்பாடு கொடுத்தும் நடவடிக்கை இல்லை என மக்கள் சாடல்...

யாழ்.சண்டிலிப்பாய் - சங்கானை இடையே வழிப்பறி கொள்ளையில் ஈடுபடும் கும்பல் தொடர்பில் மானிப்பாய் பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கியும் நடவடிக்கை இல்லை என்று விசனம் வெளியிடப்பட்டுள்ளது.

காரைநகர் - யாழ்ப்பாணம் முதன்மை வீதியில் சங்கானைக்கும் சண்டிலிப்பாய்க்கும் இடையே இந்த வழிப்பறி கொள்ளை சம்பவங்கள் அண்மைய நாள்களில் அதிகரித்துள்ளன.

நேற்றுமுன்தினம் முச்சக்கர வண்டியில் பயணித்த அரிசி ஆலை உரிமையாளரை மறித்த மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவரைத் தாக்கிவிட்டு கழுத்திலிருந்த சங்கிலியை அபகரித்துத் தப்பித்துள்ளனர்.

வங்கியில் பணம் வைப்பிலிடுவதற்கு சென்ற போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அண்மைய நாள்களில் பெண் ஒருவர் உள்பட மேலும் பலரிடம் குறித்த பகுதியில் வழிப்பறி கொள்ளை இடம்பெற்றுள்ளது.

அவை தொடர்பில் முறைப்பாடுகள் வழங்கப்பட்டும் சம்பவத்துடன் தொடர்புடையவர்களின் அடையாளங்களை வழங்கிய போதும் மானிப்பாய் பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு