யாழ்.நகரில் மோட்டார் சைக்கிளை திருடி உதிரிபாகங்களாக பிரித்த பூநகரியை சேர்ந்தவர் கைது!

ஆசிரியர் - Editor I
யாழ்.நகரில் மோட்டார் சைக்கிளை திருடி உதிரிபாகங்களாக பிரித்த பூநகரியை சேர்ந்தவர் கைது!

யாழ்.நகர வீதியில் தரித்து நின்ற மோட்டார் சைக்கிளை திருடியவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

அவரிடமிருந்து திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் உதிரிப்பாகங்கள் வெவ்வேறாக்கப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

யாழ்ப்பாணம் செல்வா திரையரங்கிற்கு முன்பகுதியில் கடந்த 29ஆம் திகதி நிறுத்தி வைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் திருடப்பட்டுவிட்டதாக யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலைய குற்ற விசாரணை பிரிவுக்கு முறைப்பாடு செய்யப்பட்டது.

குற்ற விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி கேவா வசந் தலமையிலான குழுவினர் கிளிநொச்சி பூநகரியைச் சேர்ந்த 32 வயதுடைய சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு