யாழ்.போதனா வைத்தியசாலையில் 1000 பேருக்கு கண்புரை சத்திரசிகிச்சை - நேற்று ஆரம்பம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.போதனா வைத்தியசாலையில் 1000 பேருக்கு கண்புரை சத்திரசிகிச்சை - நேற்று ஆரம்பம்..

யாழ்.போதனா வைத்திய சாலையில்1000 பேருக்கு கண்புரை சத்திர சிகிச்சை இன்றிலிருந்து ஐந்து தினங்கள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் அதன் ஆரம்ப நிகழ்வு நேற்று மாலை வடக்கு மாகாண ஆளுநரின் பங்கு பற்றுதலுடன் யாழ்.போதனா வைத்திய சாலையில் இடம்பெற்றது

அசிஸ்ட் ஆர் ஆர் பிரித்தானியா அன் இலங்கை நிறுவனத்தின் ஏற்பாட்டில் அலாக்கா மற்றும் ஆனந்தா பவுண்டேஷனின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் புனர்வாழ்வும் புதுவாழ்வும் நிறுவனத்தின் அனுசரனையில்

உலக பார்வை தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் இரத்தினபுரி வைத்தியசாலைகளின் நல்லுறவினை மேம்படுத்தும் முகமாக  இம்மாதம்  30ம் திகதி   தொடக்கம் மூன்றாம் திகதி வரை யாழ்.போதனா 

வைத்தியசாலை கண் சிகிச்சை வைத்திய நிபுணர் மலரவனின் நெறிப்படுத்தலில் கண் சிகிச்சை பிரிவில் ஆயிரம் பேருக்கு கண்புரை சத்திர சிகிச்சை மேற்கொள்வதற்கான செயற்  திட்டத்தின் கீழ்

நேற்று ஆரம்பமான கண் புரை சத்திர சிகிச்சையில் யாழ்ப்பாண சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இருந்து 50க்கும் மேற்பட்டோரும் மற்றும் அனுராதாபுரம் மதவாச்சி, பதவியா பகுதிகளில் இருந்து 170 க்கும் மேற்பட்டோருக்கு இன்றைய தினம்  சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது

எதிர்வரும் நாட்களிலும் குறித்த சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு ஆயிரம் பேருக்கு கண்புரை  சத்திர சிகிச்சை மேற்கொள்ளவுள்ளது,.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு