யாழ். ஆனைக்கோட்டையில் மின்சாரம் தாக்கி இளைஞன் பலி!

ஆசிரியர் - Editor I
யாழ். ஆனைக்கோட்டையில் மின்சாரம் தாக்கி இளைஞன் பலி!

யாழ்.ஆனைக்கோட்டை பகுதியில் மின்குமிழைப் பொருத்தும்போது மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

24 வயதுடைய உ.உசாந்தன் என்பவரே உயிரிழந்தவராவார். தனது வீட்டில் வைத்து, சுண்டல் வண்டிக்குரிய மின்குமிழைப் பொருத்தும்போதே அவர் மின்தாக்குதலுக்கு உட்பட்டார் என்று முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

அவர் உடனடியாக மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது உயிரிழந்தார்.

வலிகாமம் கிழக்கு திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் இறப்பு விசாரணைகளை மேற்கொண்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு