யாழ்.வட்டுக்கோட்டையில் கடற்படை வீதிச்சோதனையில் இருவர் கைது!

ஆசிரியர் - Editor I
யாழ்.வட்டுக்கோட்டையில் கடற்படை வீதிச்சோதனையில் இருவர் கைது!

யாழ்.வட்டுக்கோட்டை பகுதியில் 104 கிலோ எடையுடைய கேரளா கஞ்சாவுடன் இருவர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

குறித்த இருவரும் வட்டுக்கோட்டை வீதியூடாக முச்சக்கர வண்டியில் கஞ்சாவினை எடுத்துச் செல்லும் போது கடற்படையினரால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இருவரையும் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு