யாழ்.தாவடியில் 10 வயது சிறுவனுக்கு மதுபானம் அருந்தக் கொடுத்த காவாலி கைது!

ஆசிரியர் - Editor I
யாழ்.தாவடியில் 10 வயது சிறுவனுக்கு மதுபானம் அருந்தக் கொடுத்த காவாலி கைது!

யாழ்.தாவடி பகுதியில் 10 வயதுச் சிறுவனுக்கு மதுபானத்தை அருந்த கொடுத்த ஒருவர் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த சந்தேகநபர் நேற்று வெள்ளிக்கிழமை (27) முச்சக்கர வண்டியினுள் வைத்து குறித்த சிறுவனுக்கு மதுபானத்தை அருந்தக் கொடுத்துள்ளார்.

இது குறித்து சிறுவனின் தாயார் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் குறித்த சந்தேகநபர் நேற்றிரவு சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார். சிறுவனின் தந்தை வேலை நிமித்தமாக வெளிநாட்டில் வசித்து வருகிறமை குறிப்பிடத்தக்கது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு