தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்த பெண் மரணம்! யாழ்.பொலிகண்டியில் சம்பவம்...

ஆசிரியர் - Editor I
தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்த பெண் மரணம்! யாழ்.பொலிகண்டியில் சம்பவம்...

தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த வயோதிப் பெண் ஒருவர் திடீரென மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் - பொலிகண்டி தெற்கைச் சேர்ந்த 67 வயதுடைய ஜெயேந்திரன் சோதிமலர் என்பவரே  இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த வயோதிப் பெண்  திங்கட்கிழமை (23) இரவு தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த நிலையில் திடீரென மயங்கிச் விழுந்துள்ளார்.

அதனை அடுத்து அவரை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது, அவர் ஏற்கனவே  உயிரிழந்துவிட்டார் என வைத்தியர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், உடற்கூற்றுப் பரிசோதனையில் மாரடைப்புக் காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு