யாழ்.நீர்வேலியில் கோர விபத்து! கோவிலில் பொங்கிக் கொண்டிருந்த பெண் உயிரிழப்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.நீர்வேலியில் கோர விபத்து! கோவிலில் பொங்கிக் கொண்டிருந்த பெண் உயிரிழப்பு..

யாழ்ப்பாணம் நீர்வேலிப் பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் வயோதிப பெண்ணொருவர் பலியானர்.

நீர்வேலி இராசவீதி பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் பொங்கல் நிகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவேளை எதிரே நிறுத்தி வைக்கப்பட்ட வாகனத்தின் மீது டிப்பர் வாகனம் மோதியது.


குறித்த வாகனம் மூதாட்டியை மோதி தள்ளியதில் ஆலயத்தில் இருந்த மூதாட்டி சம்பவ இடத்தில் அவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் நீர்வேலி மேற்கைச் சேர்ந்த தனபாலசிங்கம் மகேஸ்வரி ஐந்து பிள்ளைகளின் தாயான (72 வயது)  என கோப்பாய் பொலிசார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பில் கோப்பாய் பொலிசார் விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு