486 கொக்கைன் போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது!

ஆசிரியர் - Editor I
486 கொக்கைன் போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது!

முல்லைத்தீவில் ஐஸ் போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (8) கைது செய்யப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் முல்லைத்தீவு விமானப்படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் போதைப்பொருளுடன் குறிித்த இளைஞர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட குறித்த நபர் முள்ளியவளை பகுதியை சேர்ந்த 20 வயதுடையவர் எனவும் , இவரிடம் இருந்து 486 கரெக்கேன் போதை மாத்திரைகளும், 34 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட குறித்த இளைஞர் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு பொலிஸ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு