கப்பல்சேவை இன்று ஆரம்பமாகாது!

ஆசிரியர் - Editor I
கப்பல்சேவை இன்று ஆரம்பமாகாது!

இந்தியா - இலங்கை இடையிலான கப்பல் சேவை இன்று ஆரம்பமாவிருந்த நிலையில் திடீரென பிற்போடப்பட்டுள்ளது.

இந்தியாவின் தமிழகம் நாகப்பட்டினம் - இலங்கையின் காங்கேசன்துறையிடையிலான செரியாபாணி என்ற பெயரைக் கொண்ட பயணிகள் கப்பல் சேவை இன்று (10) ஆரம்பமாகவிருந்த நிலையில் தொழிநுட்ப ரீதியான தடங்கல்கள் காரணமாக எதிர்வரும் 12ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது.

செரியாபாணி கப்பலின் பரீட்சார்த்த நடவடிக்கைகள் நேற்றுமுன்தினம் இடம்பெற்றிருந்தது. எனினும் தொழிநுட்ப ரீதியான தடங்கல்கள் காரணமாக சேவைகள் நிறுத்தப்படுவதாக நேற்று மாலை அறிவிக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு