பெருந்தொகை பணத்துடன் பெண் கிராமசேவகரின் பண பையை பறித்துச் சென்ற வழிப்பறி கும்பல் - உரும்பிராயில் சம்பவம்...

ஆசிரியர் - Editor I
பெருந்தொகை பணத்துடன் பெண் கிராமசேவகரின் பண பையை பறித்துச் சென்ற வழிப்பறி கும்பல் - உரும்பிராயில் சம்பவம்...

பெருந்தொகை பணத்துடன் பெண் கிராமசேவகரின் பண பையை வழிப்பறி கும்பல் பறித்துச் சென்ற சம்பவம் நேற்றுமுன்தினம் உரும்பிராய் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

உரும்பிராயிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகில் உள்ள உரும்பிராய் சந்தி நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த பெண் கிராம அலுவலர் அணிந்திருந்த கைப்பையை, மோட்டார்சைக்கிளில் வேகமாகப் பயணித்த இரண்டு இளைஞர்கள் அறுத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இது தொடர்பில் கிராம அலுவலரால் கோப்பாய்ப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது . கைப்பைக்குள் அலைபேசி மற்றும் ஒரு இலட்சத்து 75 ஆயிரம் ரூபா பணம் என்பன இருந்தன என்றும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

இது குறித்து மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு