யாழ்.சிறுப்பிட்டியில் இளைஞன் மீது துரத்தி.. துரத்தி வாள்வெட்டு!

ஆசிரியர் - Editor I
யாழ்.சிறுப்பிட்டியில் இளைஞன் மீது துரத்தி.. துரத்தி வாள்வெட்டு!

யாழ்.பருத்தித்துறை பிரதான வீதியில் சிறுப்பிட்டி பகுதியில் இன்று திங்கட்கிழமை (02) பகல் , முச்சக்கர வண்டியில் பயணித்த இளைஞர் ஒருவரை ‘பட்டா’ ரக வாகனத்தில் வந்த நபர்கள் துரத்தி துரத்தி வாளால் வெட்டியுள்ளனர். 

இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு பிள்ளைகளின் தந்தையான லக்சன் என்பவர் மீதே வாள் வெட்டு நடத்தப்பட்டுள்ளது.

நாயன்மார்கட்டைச் சேர்ந்த குறித்த நபர் சிறுப்பிட்டியில் திருமணம் செய்து வசித்து வருகின்றார்.

இந்நிலையில், முச்சக்கரவண்டியில் பயணித்த இந்த நபரைரை விரட்டிச் சென்று நேற்றைய தினம் பகல் வாள்வெட்டு நடத்தப்பட்டுள்ளது.

தப்பியோடிய நபர் சிறுப்பிட்டி வைரவர் கோயிலுக்குள் புகுந்த போதும் அங்கு வைத்தும் அவரை வாளால் வெட்டி விட்டு வன்முறைக் கும்பல் தப்பிச் சென்றுள்ளது. 

வீதியால் சென்றவர்கள் வாள்வெட்டால் காயமுற்ற இளைஞரை மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு