யாழ்.தாவடியில் வீடொன்றின் மீது அதிகாலையில் பெற்ரோல் குண்டு தாக்குதல், 5 பேர் காயம்!

ஆசிரியர் - Editor I
யாழ்.தாவடியில் வீடொன்றின் மீது அதிகாலையில் பெற்ரோல் குண்டு தாக்குதல், 5 பேர் காயம்!

யாழ்.தாவடி - வன்னியசிங்கம வீதியில் உள்ள வீடு ஒன்றின் மீது  இன்று அதிகாலை பெட்ரோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டதோடு வீட்டு உடமைகள் சேதமாக்கப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதலில் ஐந்து பேர் காயம் அடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் பெட்ரோல் குண்டு தாக்கு நடத்தப்பட்ட வீட்டில் உள்ள யுவதியை  காதலித்ததாகவும் பெற்றோரிடம் திருமணம் செய்து வைக்குமாறு கூறியபோது,

பெற்றோர் மறுத்திருந்த நிலையில்  குறித்த இளைஞன் தனது குழுவினருடன் வந்து இன்று அதிகாலை வீட்டினை தாக்கி சேதப்படுத்தி வீட்டில் பெட்ரோல் குண்டு தாக்குதலையும் மேற்கொண்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு