நல்லூரில் யாசகம் பெறுவதற்கு பெற்றோருடன் வந்த குழந்தையை காணவில்லை!

ஆசிரியர் - Editor I
நல்லூரில் யாசகம் பெறுவதற்கு பெற்றோருடன் வந்த குழந்தையை காணவில்லை!

யாழ்.நல்லூரில் யாசகம் பெற பெற்றோர்களுடன் வந்த பெண் குழந்தையை காணவில்லை என யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் பெற்றோரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வவுனியா செட்டிக்குளம் பகுதியில் இருந்து , நல்லூர் ஆலய தேர் திருவிழாவில் யாசகம் பெறுவதற்காக இரண்டு பிள்ளைகளுடன் பெற்றோர் வந்துள்ளனர்.

அவர்கள் தேர் மற்றும் தீர்த்த திருவிழாவின்போது நல்லூரில் யாசகம் பெற்றுள்ளனர். இதன்போது , அவர்களின் இரண்டரை வயது பெண் பிள்ளை நல்லூர் வளாகத்தில் நேற்றைய தினம் தீர்த்த திருவிழாவின்போது காணாமல் போயுள்ளது.

தமது குழந்தை காணாமல் போனது குறித்து , பெற்றோரால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு