யாழ்.சிறையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் பலி!

ஆசிரியர் - Editor I
யாழ்.சிறையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் பலி!

போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதாகி விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர் திடீர் சுகவீனமுற்ற நிலையில் செவ்வாய்க்கிழமை (12) உயிரிழந்துள்ளார்.

போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதான மேற்படி இளைஞனை பொலிஸார்  நீதிமன்றில் முற்படுத்தியவேளை மன்று அவரை விளக்கமறியலில் தடுத்து வைக்க உத்தரவிட்டது.

அதன் பிரகாரம் யாழ்ப்பாண சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் திடீர் சுகவீனமுற்ற நிலையில் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு