யாழ்.நல்லூர் கந்தசுவாமி ஆலய நந்தவன பகுதியில் வேலை செய்யும் ஒருவர் மாடு இடித்து சாவு!

ஆசிரியர் - Editor I
யாழ்.நல்லூர் கந்தசுவாமி ஆலய நந்தவன பகுதியில் வேலை செய்யும் ஒருவர் மாடு இடித்து சாவு!

யாழ்.நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் நந்தவனப் பகுதியில் பணியாற்றுமொருவர் காளை மாடு முட்டி உயிரிழந்துள்ளார்.

இருபாலையைச்  சேர்ந்த நித்தியசிங்கம் என்ற 60 வயது மதிக்கத்தக்க ஒருவரே உயிரிழந்துள்ளார்.

இன்று வியாழக்கிழமை மாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காளை மாட்டுக்கு உணவு வைக்க சென்ற வேளை காளை மாடு முட்டி காயமுற்றவர் வீழ்ந்து கிடந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு