மதுபோதையில் அட்டகாசம்! பெலாரஸ் நாட்டு பிரஜை கைது..

ஆசிரியர் - Editor I
மதுபோதையில் அட்டகாசம்! பெலாரஸ் நாட்டு பிரஜை கைது..

அதிக மதுபோதையில் குழப்பம் விளைவித்த பெலாரஸ் நாட்டு பிரஜையொருவர் ஹபராதுவ பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

முரண்பாட்டை ஏற்படுத்தும் வகையில் குறித்த பெலாரஸ் பிரஜை  செயற்படுவதாக கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய அவர் நேற்று வெள்ளிக்கிழமை (08) கைது செய்யப்பட்டுள்ளார்.

பெலாரஸ் நாட்டு பிரஜை அதிக மதுபோதையில் தனது நண்பரையும் தங்கியிருந்த உணவக உரிமையாளரின் மகள் உள்ளிட்டோரை தாக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது குறித்த பெலாரஸ் நாட்டு பிரஜை பொலிஸாரையும் தாக்குவதற்கு முயற்சித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு