யாழ்.அளவெட்டியில் அரைக்கும் ஆலை ஒன்றில் தீ விபத்து!

ஆசிரியர் - Editor I
யாழ்.அளவெட்டியில் அரைக்கும் ஆலை ஒன்றில் தீ விபத்து!

யாழ்.அளவெட்டி வடக்கு பகுதியில் அரைக்கும் ஆலை ஒன்றில் தீ விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, நேற்று மாலை அரைக்கும் ஆலை  வேலைகள் நிறைவடைந்து உரிமையாளரால் பூட்டப்பட்டது. 

இன்று காலை 8 மணி அளவில் ஆலையை திறக்கச் சென்றபோது ஆலை தீப்பற்றி எரிந்து கொண்டிருந்ததை கண்ட உரிமையாளர் அயலவர்களை அழைத்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளார்.

இதன்போது பல லட்சம் ரூபாய் பெறுமதியான இயந்திரங்கள் ஏனைய உபகரணங்கள் தளபாடங்கள் என்பன எரிந்து  முற்றாக நாசமாகி உள்ளன.

அரிசி ஆலை உரிமையாளரால்  தெல்லிப்பழை பொலிச் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெல்லிப்பளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு