வாள்கள் மற்றும் ஹெரோயினுடன் நடமாடிய நபர் கைது!!

ஆசிரியர் - Editor I
வாள்கள் மற்றும் ஹெரோயினுடன் நடமாடிய நபர் கைது!!

யாழ்.நெல்லியடி பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் வாள்களுடன் நடமாடிய ஒருவர் சிறப்பு அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டார்.

இன்று மாலை அதே இடத்தைச் சேர்ந்த 33 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபரிடமிருந்து 3 கிராம் 80 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் 3 வாள்கள் என்பன கைப்பற்றப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் சந்தேகநபர் முற்படுத்தப்படுவார் என்றும் பொலிஸார் கூறினர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு