யாழ்.போதனா வைத்தியசாலையில் சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரத்துடன் தொடர்புடைய சகலரும் நீதியின் முன் நிறுத்தப்படவேண்டும்...

ஆசிரியர் - Editor I
யாழ்.போதனா வைத்தியசாலையில் சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரத்துடன் தொடர்புடைய சகலரும் நீதியின் முன் நிறுத்தப்படவேண்டும்...

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிறுமி வைசாலியின் இடது கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்டமை தொடர்பில் நீதியான விசாரணை இடம்பெற்று குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சிவி விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், காய்ச்சல் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்ட சிறுமியின் இடது கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்ட சம்பவம் மன வேதனையை தருகிறது.

நான் நீதிபதியாக செயற்பட்டவன் என்ற நீதியில் விசாரணை முடிவுறாமல் இவர்கள் தான் குற்றவாளி எனக் கூற முடியாது. தாதியர்களின் தவறே சிறுமியின் கை துண்டிக்க பிரதான காரணம் என செய்திகள் வெளியாகிய நிலையில் சம்பந்தப்பட்ட அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.

சிறுமியின் எதிர்காலம் பாதிக்கப்பட்ட நிலையில் அரசாங்கம் இழப்பீட்டை பெற்றுக் கொடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு