உறவினர் வீட்டுக்குச் சென்று தாலிக் கொடியை திருடிய பெண் கைது! யாழ்.சித்தங்கேணியில் சம்பவம்...

ஆசிரியர் - Editor I
உறவினர் வீட்டுக்குச் சென்று தாலிக் கொடியை திருடிய பெண் கைது! யாழ்.சித்தங்கேணியில் சம்பவம்...

யாழ்.சித்தங்கேணி பகுதியில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டிற்கு சென்று தாலி கொடியை திருடிய குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வீட்டின்றில் மேசை மீது வைக்கப்பட்டிருந்த தாலி கொடியை காணவில்லை என வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் தாலிக் கொடி காணாமல்போன அன்றைய தினம் அவர்களின் வீட்டுக்கு வந்து சென்ற உறவினரான பெண்ணின் மீது சந்தேகம் கொண்டு அவரை பொலிஸார் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இதன்போது தாலி கொடியை திருடியதை ஒப்புக்கொண்ட பெண் அதனை அடகு நிறுவனம் ஒன்றில் 2 இலட்ச ரூபாய்க்கு அடகு வைத்துள்ளதாக தெரிவித்தார்.

அதனை அடுத்து அடகு வைக்கப்பட்ட நகையை மீட்ட பொலிஸார் நகையுடன் பெண்ணை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் நேற்று முன்தினம் முற்படுத்தினர்.

வழக்கினை விசாரித்த நீதவான்  பெண்ணை கடுமையாக எச்சரித்து பிணையில் செல்ல அனுமதித்தார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு