யாழில் நடந்த மது விருந்தில் கலவரம்! தாக்குதலுக்கு இலக்கான கிளிநொச்சி இளைஞன் பலி...

ஆசிரியர் - Editor I
யாழில் நடந்த மது விருந்தில் கலவரம்! தாக்குதலுக்கு இலக்கான கிளிநொச்சி இளைஞன் பலி...

யாழ்.எழுதுமட்டாவாழ் பகுதியில் மதுவிருந்தில் ஏற்பட்ட கைக்கலப்பில் தாக்குதலுக்கு இலக்காகி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி உழவனூரை சேர்ந்த செல்வக்குமார் ஜெகதீஷ்குமார் (வயது 28) என்பவரே உயிரிழந்துள்ளார்.

கடந்த 31ஆம் திகதி எழுதுமட்டுவாழ் பகுதியில் உறவினர் வீடொன்றில் நடைபெற்ற நிகழ்வுக்கு கிளிநொச்சியில் இருந்து மூவர் வருகை தந்து நிகழ்வை தொடர்ந்து இடம்பெற்ற மது விருந்தில் கலந்து கொண்டனர்.

அதன் போது எழுதுமட்டுவாழ் பகுதியை சேர்ந்தவர்களுக்கும் கிளிநொச்சியில் இருந்து வருகை தந்தவர்களுக்கும் இடையில் போதையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு கைக்கலப்பாக மாறியுள்ளது. அதன்போது ஜெகதீஸ்குமாரை கட்டி வைத்தும் தாக்கியுள்ளனர். 

பின்னர் அங்கிருந்தவர்கள் அவர்களை சமரசப்படுத்தி அவ்விடத்தில் இருந்து அனுப்பி வைத்தனர். இந்நிலையில் திடீர் உடல்நல குறைபாடு ஏற்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் இருவரை கைது செய்துள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு