தனிப்பட்ட தகராறினால் 28 வயதான இளைஞர் அடித்துக் கொலை! 2 பேர் கைது..

ஆசிரியர் - Editor I
தனிப்பட்ட தகராறினால் 28 வயதான இளைஞர் அடித்துக் கொலை! 2 பேர் கைது..

பளை - முகமாலை பிரதேசத்தில் குழுவொன்றினால் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இத்தாக்குதல் கடந்த 31ஆம் திகதி இடம்பெற்றதாகவும், பலத்த காயமடைந்த நபர், யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று (03) பிற்பகல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தனிப்பட்ட தகராறு காரணமாக உயிரிழந்தவரின் சகோதரியின் கணவர் உள்ளிட்ட குழுவினரே இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

கொலையுடன் தொடர்புடைய இருவர் பளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் 34 மற்றும் 31 வயதுடைய பளை மற்றும் அரியாலை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு