யாழ்.பண்ணை பகுதியில் நேற்றிரவு பொலிஸார் முற்றுகை, மண்டைதீவை சேர்ந்த ஒருவர் கைது!

ஆசிரியர் - Editor I
யாழ்.பண்ணை பகுதியில் நேற்றிரவு பொலிஸார் முற்றுகை, மண்டைதீவை சேர்ந்த ஒருவர் கைது!

யாழ்.பண்ணைப் பகுதியில் நேற்று (03) இரவு ஒரு தொகை  கஞ்சாவுடன் மண்டைதீவு பகுதியைச் சேர்ந்த 32 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டார்.

யாழ்.பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய யாழ்ப்பாண பொலிஸ் நிலைய போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி எஸ்.எஸ்.சுபசிங்க

தலைமையிலான குழு கைது நடவடிக்கையை முன்னெடுத்தது. கைது நடவடிக்கையின்போது 765 கிராம் கஞ்சா பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

மேலதிக நடவடிக்கைக்காக சந்தேகநபர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு