வீட்டார் செல்வச்சந்நிதி ஆலயத்திற்கு சென்றிருந்த நிலையில் வீடு உடைத்து கொள்ளை! கரணவாயில் சம்பவம்...

ஆசிரியர் - Editor I
வீட்டார் செல்வச்சந்நிதி ஆலயத்திற்கு சென்றிருந்த நிலையில் வீடு உடைத்து கொள்ளை! கரணவாயில் சம்பவம்...

யாழ்.செல்வசந்நிதி ஆலய தேர் திருவிழாவிற்கு சென்றவர்களின் வீடு உடைக்கப்பட்டு பணம் மற்றும் நகைகள் என்பன கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

வடமராட்சி - கரணவாய் பகுதியை சேர்ந்த குடும்பம் ஒன்று தமது வீட்டினை பூட்டி விட்டு நேற்றைய தினம் புதன்கிழமை சந்நிதி ஆலய தேர் திருவிழாவிற்கு சென்று இருந்தனர்.

தேர் திருவிழா முடிந்து வீடு திரும்பிய போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை அவதானித்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த 11பவுண் நகைகளும் 75ஆயிரம் ரூபாய் பணமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதை அறிந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு