குறிகட்டுவான் இறங்கு துறைக்குள் கனரக வாகனங்கள் நுழைய தடை!!

ஆசிரியர் - Editor I
குறிகட்டுவான் இறங்கு துறைக்குள் கனரக வாகனங்கள் நுழைய தடை!!

யாழ்.புங்குடுதீவு இறங்குதுறைக்குள் கனரக வாகனங்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இறங்கு துறையின் கீழ் பகுதியில் இருக்கும் இரும்புகள் துருப்பிடித்து வலுவிழந்து காணப்படுவதனால், 

கனரக வாகனங்கள் செல்வதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக, வடமாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் குரூஸ் தெரிவித்துள்ளார்.

இறங்கு துறை பகுதிக்கு மனித வலுவை பயன்படுத்தி பொருட்களை கொண்டு சென்று படகுகளில் ஏற்றுமாறு கேட்டுக்கொண்டுள்ளோம்.

அடுத்த வாரம் கப்பல் கட்டுமானம் தொடர்பான விசேட குழு யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளது. 

அந்த குழுவுடன் இணைந்து இறங்கு துறை தொடர்பில் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும். அது வரையில் இறங்கு துறை பகுதிக்கு கனரக வாகனங்கள் செல்ல தடை விதித்துள்ளோம் என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு