விபத்தில் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த பொலிஸ் அதிகாரி பலி!

ஆசிரியர் - Editor I
விபத்தில் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த பொலிஸ் அதிகாரி பலி!

விபத்தில் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பொலிஸ் அதிகாரி சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளார்.

அனுராதபுரம் பகுதியை சேர்ந்த , செனவிரட்ன (வயது 27) என்பவரே உயிரிழந்துள்ளார்.

கடந்த 25ஆம் திகதி கிளிநொச்சி பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த வேளை கனரக வாகனம் ஒன்றுடன் விபத்துக்கு உள்ளாகி படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு