யாழ்.திருநெல்வேலியில் மதுபோதையில் கத்தியுடன் நின்று அட்டகாசம்!! யாழ்.பல்கலைக்கழக சிங்கள மாணவன் கைது...

ஆசிரியர் - Editor I
யாழ்.திருநெல்வேலியில் மதுபோதையில் கத்தியுடன் நின்று அட்டகாசம்!! யாழ்.பல்கலைக்கழக சிங்கள மாணவன் கைது...

நிறைபோதையில் அட்டகாசம் புரிந்த யாழ்.பல்கலைக்கழக மாணவன் ஒருவன் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, திருநெல்வேலி சந்தையை அண்மித்த பகுதியில் தங்கி இருக்கும் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பெரும்பான்மை இன மாணவன் ஒருவர் போதை தலைக்கேறிய நிலையில் சக மாணவர்களின் பெயரைக் கேட்டு அருகில் இருந்த வர்த்தக நிலையத்தில் இருந்தவருடன்  முரண்பட்டுள்ளார்.

முரண்பாடு முற்றிய நிலையில் நான் யார் என தெரியுமா என சிங்களத்தில் பேசியவாறு கத்தி ஒன்றைக் காட்டி அருகில் இருக்கும் தங்குமிட மாணவர்கள் எங்கே என வினாவியுள்ளார்

இவ்வாறு முரண்பாடு முற்றிய நிலையில் வர்த்தக நிலையத்தினரால் கோப்பாய் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து குறித்த மாணவரை பொலிசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபர் போதைப் பொருளுக்கு அடிமையானவரா அல்லது மது போதையில் அடாவடியில் ஈடுபட்டாரா என உறுதி செய்யப்படாத நிலையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்.போதன வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வைத்தியப் பரிசோதனைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு