பழைய மாணவர்கள் ஒன்றுகூடலுக்காக கனடாவிலிருந்து யாழ்ப்பாணம் வந்தவர் திடீரென மயங்கி விழுந்து பலி...

ஆசிரியர் - Editor I
பழைய மாணவர்கள் ஒன்றுகூடலுக்காக கனடாவிலிருந்து யாழ்ப்பாணம் வந்தவர் திடீரென மயங்கி விழுந்து பலி...

யாழ் தெல்லிப்பழை மகாஜன கல்லுரி ஒன்று கூடலில் நடனமாடிக்கொண்டு இருந்த கனடா நாட்டில் இருந்து வந்தவர் திடீரென கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் ஒன்று நேற்றுமுன்தினம் (26) இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

தெல்லிப்பழையில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில், மஹாஜனா கல்லூரியில் கல்வி கற்ற பழைய மாணவர்களது ஒன்றுகூடல் நடைபெற்றது.

இதன்போது கனடாவில் இருந்து வருகை தந்த குறித்த நபர் பாடல் ஒன்றுக்கு நடனமாடிக்கொண்டு இருந்தவேளை திடீரென கீழே விழுந்தார்.

அவரை மீட்டு தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

அதன்பின்னர் பிரேத பரிசோதனைக்காக சடலமானது யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ. ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

சோடா கொம்பனி வீதி, மல்லாகம் பகுதியைச் சேர்ந்த நாகராஜா சசிதரன் (வயது 61) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு