யாழ்.குடாநாட்டை அச்சுறுத்தும் முகமூடி கொள்ளையர்கள்!! இன்று அதிகாலையும் சங்கிலியன் வீதியில் கொள்ளை..

ஆசிரியர் - Editor I
யாழ்.குடாநாட்டை அச்சுறுத்தும் முகமூடி கொள்ளையர்கள்!! இன்று அதிகாலையும் சங்கிலியன் வீதியில் கொள்ளை..

யாழ்.மாவட்டத்தில் இரவு நேரங்களில்  வீடுகளுக்குள் இறங்கி வீட்டில் உள்ளவர்களை கத்திமுனையில் அச்சுறுத்தி நகை திருடும் மூன்று சம்பவங்கள் இவ்வாரம் இடம்பெற்றுள்ளது.

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரண்டு சம்பவங்கள் ஏற்கனவே பதிவாகியிருந்த நிலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்கிலியன் வீதி பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் இறங்கிய முகமூடி அணிந்த மூவரடங்கிய கும்பல் வீட்டிலிருந்தவரை கட்டிவைத்து தாக்கி,

கத்தி முனையில் அச்சுறுத்தி வீட்டிலிருந்த 20 பவுண் நகைகளை திருடி சென்றதாக வீட்டு உரிமையாளர் தெரிவித்துள்ளார். 

கடந்த புதன்கிழமையிலிருந்து திருட்டு சம்பவங்கள் இடம்பெற்றுவரும் நிலையில் திருட்டு சம்பவங்கள் தொடர்பில் ஏற்கனவே யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டபோதிலும் திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இன்று வரை கைது செய்யப்படவில்லை.

குறித்த திருட்டு சம்பவங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளது என பொதுமக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு