யாழ்.திருநெல்வேலி - பால்பண்ணை பகுதியில் கூரை பிரித்து வீட்டுக்குள் நுழைந்து கத்தியை காட்டி மிரட்டி கொள்ளை முயற்சி...

ஆசிரியர் - Editor I
யாழ்.திருநெல்வேலி - பால்பண்ணை பகுதியில் கூரை பிரித்து வீட்டுக்குள் நுழைந்து கத்தியை காட்டி மிரட்டி கொள்ளை முயற்சி...

யாழ்.திருநெல்வேலி - பால்பண்ணை பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் இன்று அதிகாலை 2 மணியளவில் கூரையை பிரித்து நுழைந்த முகமூடி கொள்ளை கும்பல் வீட்டில் இருந்தவர்களை கத்திமுனையில் கட்டிவைத்து மிரட்டிய நிலையில் அயலவர்கள் கூடியதால் தப்பி ஓடியுள்ளது.

இன்று அதிகாலை 2 மணிளவில் வீட்டின் கூரையை பிரித்து முகமூடி அணிந்தவாறு வீட்டிற்குள் இறங்கிய மூவரடங்கிய கும்பல் வீட்டில் உறக்கத்தில் இருந்தவரை தட்டி எழுப்பி  இரண்டு கைகளையும் கயிற்றினால் கட்டிவைத்து கழுத்தில் கத்தினை வைத்து எங்கே நகையுள்ளது என மிரட்டி அரை மணி நேரமாக குறித்த கும்பல் அடாவடிபுரிந்துள்ளது

எனினும் குறித்த நபர் கூக்குரல் இட்டு அயலவர்கள் வீட்டு விளக்கை ஒளிர விட்டதன் காரணமாக  அச்சுறுத்திய கும்பல் தாங்கள் கொண்டு வந்த பெரிய கத்தியினையும் கைவிட்டுவிட்டு அவ்விடத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில்  யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ் அதிபரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதோடு 

கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான கோப்பாய்  குற்ற த்தடுப்பு பொலிஸ் பிரிவி வினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இதேபோன்று நேற்று முன்தினம் கல்வியங்காடு பகுதியில் கிறிஸ்தவ மதகுரு ஒருவரை கத்தி காட்டி அச்சுறுத்தி பணம் திருடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு