யாழ்.கல்வியங்காட்டில் தேவாலயத்திற்குள் புகுந்து அருட்தந்தை கழுத்தில் வைத்து மிரட்டி கொள்ளை...

ஆசிரியர் - Editor I
யாழ்.கல்வியங்காட்டில் தேவாலயத்திற்குள் புகுந்து அருட்தந்தை கழுத்தில் வைத்து மிரட்டி கொள்ளை...

யாழ்.கல்வியங்காடு பகுதியில் உள்ள தேவாலயத்திற்குள் புகுந்து அருட்தந்தையின் கழுத்தில் கத்திவைத்து மிரட்டி பெருமளவு பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் , கல்வியங்காட்டு பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றினுள் நேற்றைய தினம் வியாழக்கிழமை அத்துமீறி நுழைந்த நால்வர் கொண்ட கொள்ளை கும்பல் ஒன்று அருட்தந்தையரின் கழுத்தில் கத்தியை வைத்து , மிரட்டி கொள்ளையில் ஈடுபட்டது. 

அருட்தந்தையரின் 30 ஆயிரம் ரூபாய் பணமும் , தேவாலய உண்டியலில் இருந்த 15 ஆயிரம் ரூபாய் பணமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு