யாழ்.வசாவிளானில் வீடு புகுந்து 20 பவுண் நகை கொள்ளை! உரிமையாளர் வெளியில் சென்றிருந்த சமயம் துணிகரம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.வசாவிளானில் வீடு புகுந்து 20 பவுண் நகை கொள்ளை! உரிமையாளர் வெளியில் சென்றிருந்த சமயம் துணிகரம்..

யாழ்.வசாவிளான் பகுதியில் உள்ள வீடொன்றின் உரிமையாளர்கள் நேற்றைய தினம் வியாழக்கிழமை வங்கி ஒன்றுக்கு சென்ற சமயம் , வீட்டினுள் நுழைந்த திருடர்கள் வீட்டில் இருந்த 20 பவுண் நகைகளை திருடி சென்றுள்ளனர். 

அதேவேளை வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கமரா உள்ளிட்ட அவற்றின் தொகுதிகளையும் பிடுங்கி சென்றுள்ளனர். 

திருடப்பட்ட நகைகளின் பெறுமதி சுமார் 20 இலட்ச ரூபாய் எனவும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் பலாலி பொலிஸார் தெரிவித்தனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு