சரத் வீரசேகரவின் கருத்தை கண்டித்து சட்டத்தரணிகள் பணி புறக்கணிப்பு போராட்டம்...

ஆசிரியர் - Editor I
சரத் வீரசேகரவின் கருத்தை கண்டித்து சட்டத்தரணிகள் பணி புறக்கணிப்பு போராட்டம்...

நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர முல்லைத்தீவு நீதிபதி தொடர்பாக தெரிவித்த கருத்தினைக் கண்டித்து யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள நீதிமன்றங்களில் சட்டத்தரணிகள் இன்றையதினம்(11) பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 22 ம் திகதியன்று முல்லைதீவு நீதிபதி தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர அவதூறு பரப்பும் வகையிலும் நீதித்துறை சுதந்திரத்தை கேள்விக்கு உட்படுத்தும் வகையிலும் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையை கண்டித்தும் எதிர்ப்பு தெரிவித்தும் 

முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கம் இன்று (25) காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை நீதிமன்ற நடவடிக்கைகளை புறக்கணித்து அடையாள கண்டன போராட்டம் ஒன்றை நடத்த அழைப்பு விடுத்தது.

இந்த அடையாள புறக்கணிப்பு போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் ஏனைய கிளைச் சங்கங்களும் தத்தமது நீதிமன்றங்களில் குறித்த அடையாள  போராட்டத்தினை மேற்கொண்டனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு