யாழ்.குடாநாட்டில் இளநீர், பழங்களின் விற்பனை வீழ்ச்சி! வியாபாரிகள் கவலை...

ஆசிரியர் - Editor I
யாழ்.குடாநாட்டில் இளநீர், பழங்களின் விற்பனை வீழ்ச்சி! வியாபாரிகள் கவலை...

யாழ்.மாவட்டத்தில் அதிக வெப்ப நிலை உடனான வறட்சியான காலநிலை நிலவும் நிலையிலும் பழங்கள், இளநீர் போன்றவற்றின் வியாபாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள வியாபாரிகள் விலை உயர்வே காரணம் எனவும் கூறியுள்ளார்.

குறிப்பாக குடா நாட்டில் வெப்பமான காலநிலை நிலவும் காலத்தில் பழம், இளநீர்  வியாபாரம் அதிகளவில் இடம்பெறும் எனினும் தற்போது பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக பழங்களின் விலை அதிகரித்துள்ளது இதன் காரணமாக பழம், இளநீர் வியாபாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக வெப்பமான காலநிலை நிலவும் காலத்தில் பொதுமக்கள் பழம் வாங்க  வருவார்கள் தற்பொழுது பழங்களின் விலையினை கேட்டு விட்டு சென்று விடுகின்றார்கள் ஏனென்றால் அதிக அளவில் விலை அதிகரித்துள்ளது இதன் காரணமாக எமது வியாபாரம் மற்றும் முழுதாக பாதிக்கப்பட்டுள்ளது எனக்கு கவலை வெளியிட்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு