யாழ்.கொட்டடியில் இளைஞனின் சடலம் மீட்பு! அதிகளவு ஜஸ் போதைப் பொருளை பயன்படுத்தியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.கொட்டடியில் இளைஞனின் சடலம் மீட்பு! அதிகளவு ஜஸ் போதைப் பொருளை பயன்படுத்தியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம்..

யாழ்.கொட்டடி பகுதியில் பிரபல வர்த்தகர் ஒருவரின் மகன் அதிக போதையை உள்ளெடுத்ததால் உயிரிழந்துள்ளார்.

32 வயது மதிக்கதக்க  இளைஞனே கொட்டடியில் உள்ள அவரது வீட்டில் இன்று மாலை உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞன் ஐஸ் போதைப் பொருளை  அதிகளவில் பாவித்த நிலையில் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மீட்கப்பட்ட சடலம் யாழ்.போதான வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் நாளைய தினமே சட்டவைத்திய அதிகாரியின் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது.

அதன் பின்னரே உயிரிழப்புக்கான உறுதியான காரணம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு