யாழ்.சண்டிலிப்பாயில் வன்முறை கும்பல் வீடு புகுந்து அட்டூழியம்!

ஆசிரியர் - Editor I
யாழ்.சண்டிலிப்பாயில் வன்முறை கும்பல் வீடு புகுந்து அட்டூழியம்!

யாழ்.சண்டிலிப்பாய் பகுதியில் நேற்று இரவு வீடு புகுந்து வன்முறை கும்பல் வீட்டின் மீது பெற்ரோல் குண்டு தாக்குதல் நடத்தியுள்ளதுடன் மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைத்து அட்டகாசம் புரிந்துள்ளது.

வீட்டில் இருந்தவர்கள் வெளியூர் சென்றிருந்த நிலையில் இளைஞர் ஒருவர் மட்டும் தனிமையில் இருந்துள்ளார். இந்நிலையில் வன்முறை கும்பல் வீட்டுக்குள் நுழைவதை அவதானித்த இளைஞன் அயல் வீட்டுக்கு தப்பி ஓடியுள்ளார்.

பின்னர் வீட்டுக்குள் நுழைந்த வன்முறைக் கும்பல் வீட்டில் இருந்த உடமைகளை சேதப்படுத்தியதுடன் வீட்டின் மீது பெற்ரோல் குண்டு வீசியதுடன்

வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களையும் தீ வைத்து கொழுத்தியுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு