யாழ்.செம்மணி பகுதியில் கோர விபத்து! கணவன் சம்பவ இடத்திலேயே பலி, மனைவி ஆபத்தான நிலையில்...

ஆசிரியர் - Editor I
யாழ்.செம்மணி பகுதியில் கோர விபத்து! கணவன் சம்பவ இடத்திலேயே பலி, மனைவி ஆபத்தான நிலையில்...

யாழ்.செம்மணி பகுதியில் இன்று காலை மோட்டார் சைக்கிளும், பொலிசாரின் தண்ணீர் பவுசரும் மோதி விபத்துக்குள்ளானதில் கணவன் உயிரிழந்ததுடன் மனைவி படுகாயமடைந்துள்ளார்.

நல்லூர் செம்மணி வளைவிற்கு அண்மையாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கணவன் மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் வந்தபோது, பொலிசாரின் தண்ணீர் பவுசருடன் மோதி விபத்துக்குள்ளாகினர்.

இதில் கணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். புவனேஸ்வரன் மனோஜ் (31) என்ற கொக்குவில் கிழக்கை சேர்ந்த இளைஞரே உயிரிழந்தார்.

மன்னாரை சேர்ந்த 26 வயதான மனைவி உயிராபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு