குருந்தூர் மலை பொங்கல் விவகாரம்!! யாழ்.ஆரியகுளம் நாக விகாரையில் இரகசிய கூட்டம், ஊடகங்கள் வெளியே...

ஆசிரியர் - Editor I
குருந்தூர் மலை பொங்கல் விவகாரம்!! யாழ்.ஆரியகுளம் நாக விகாரையில் இரகசிய கூட்டம், ஊடகங்கள் வெளியே...

முல்லைத்தீவு - குருந்தூர்மலை பொங்கல் விவகாரம் தொடர்பில் யாழ்.ஆரியகுளம் நாக விகாரையில் தென்னிலங்கை பௌத்த பிக்குகளும், சிவசேனை உள்ளிட்ட சில சைவ அமைப்புக்களின் பிரதிநிதிகள், குருமார்களும் இரகசிய கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று வியாழக்கிழமை (17) காலை முதல் இந்த கலந்துரையாடல் நடந்து வருகிறது. இந்த கலந்துரையாடலில் ஊடகங்கள் அனுமதிக்கப்படாமல், இரகசியமாக நடந்து வருகிறது.

நாளை குருந்தூர் மலையில் சைவர்கள் பொங்கலில் ஈடுபடவுள்ள நிலையில், அது தொடர்பாக கலந்துரையாடல் இடம்பெறுகிறதாக தெரிவிக்கப்படுகிறது.

குருந்தூர்மலையில் நாளை வெள்ளிக்கிழமை சைவ அமைப்புக்களால் பொங்கலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு