இன மோதலை உருவாக்க முயற்சி!! மேர்வின் சில்வாவுக்கு எதிராக யாழில் முறைப்பாடு பதிவு....

ஆசிரியர் - Editor I
இன மோதலை உருவாக்க முயற்சி!! மேர்வின் சில்வாவுக்கு எதிராக யாழில் முறைப்பாடு பதிவு....

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா, விகாரைகள் மீதும் பிக்குகள் மீதும் கை வைத்தால் கை வைத்தவர்களின் தலைகளுடன் களனி திரும்புவேன் என கூறிய கருத்திற்கு எதிராக யாழ்.வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

மேர்வின் சில்வாவின் இந்த கருத்திற்கு பலரும் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் வட்டுக்கோட்டை மற்றும் ஊர்காவற்துறை தொகுதி அமைப்பாளர் முருகவேல் சதாசிவம், மேர்வின் சில்வாவின் கருத்துக்கு எதிராக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

இதன்போது, இனவாத கருத்துக்களை தூண்டி வன்முறையை ஏற்படுத்துவதற்கு மேர்வின் சில்வா முயல்வதாக அவர் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு