யாழ்.வடமராட்சியில் வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட இளம் குடும்ப பெண் மரணம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.வடமராட்சியில் வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட இளம் குடும்ப பெண் மரணம்..

திடீர் வயிற்று வலியால் பாதிக்கப்பட்டிருந்த இளம் குடும்ப பெண் ஒருவர் உயரிழந்த சம்பவம் யாழ்.புலோலி - குரும்பகட்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மன்னார் சென் சேவியர் மகளிர் பாடசாலை ஆசிரியையான இவர் திடீர் வயிற்று வலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் கூறியுள்ளனர்.

மரண விசாரணையின் பின் சடலம் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போது கருப்பை குழாயில் குழந்தை தங்கி குழாய் வெடித்ததில் ஏற்பட்ட அதிக இரத்தப்போக்கே மரணத்திற்கு காரணம் என கூறப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு