யாழ்.சிறைச்சாலையில் கைதிக்கு தொலைபேசி வழங்கிய சிறை உத்தியோகத்தர் கைது!

ஆசிரியர் - Editor I
யாழ்.சிறைச்சாலையில் கைதிக்கு தொலைபேசி வழங்கிய சிறை உத்தியோகத்தர் கைது!

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதி ஒருவருக்கு தொலைபேசி வழங்கிய குற்றச்சாட்டில் சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறைச்சாலையில் நடைபெற்ற சோதனையில் தொலைபேசி ஒன்று நேற்று செவ்வாய்க்கிழமை சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் கைப்பற்றப்பட்டது.

சிசிடிவி கண்காணிப்பு கமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு கைதிக்கு தொலைபேசி வழங்கிய சிறை உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

சந்தேகநபர் இன்றைய தினம் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு