வீதியை கடக்க முயன்ற பெண் மோட்டார் சைக்கிள் மோதி பலி!

ஆசிரியர் - Editor I
வீதியை கடக்க முயன்ற பெண் மோட்டார் சைக்கிள் மோதி பலி!

மோட்டார் சைக்கிளில் விபத்தில் காயமடைந்த வயோதிப பெண்மணி சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். 

கோப்பாய் தெற்கை சேர்ந்த நாகராசா ராசபூபதி (வயது 68) என்பவரே உயிரிழந்துள்ளார்.

பருத்தித்துறை வீதியில் உள்ள தனது வீட்டுக்கு கடந்த வெள்ளிக்கிழமை இரவு வீதியை கடக்க முயன்றபோது மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது.

படுகாயமடைந்த பெண் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு