வறுமை காரணமாக பெரிய தந்தை வீட்டில் விடப்பட்ட சிறுமி! துஷ்பிரயோகம் செய்த பெரிய தந்தை, யாழ்.தீவகத்தில்...

ஆசிரியர் - Editor I
வறுமை காரணமாக பெரிய தந்தை வீட்டில் விடப்பட்ட சிறுமி! துஷ்பிரயோகம் செய்த பெரிய தந்தை, யாழ்.தீவகத்தில்...

வறுமை காரணமாக பெரிய தந்தையின் வீட்டில் தங்கவைக்கப்பட்ட சிறுமி பெரிய தந்தையால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

வறுமை காரணமாக 17 வயதான மகளை , தந்தையின் அண்ணா (சிறுமியின் பெரியப்பா) வீட்டில் பெற்றோர் தங்க வைத்துள்ளனர். 

அந்நிலையில் சிறுமியின் பெரிய தந்தை நீண்ட காலமாக சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி வந்துள்ளார். இது குறித்து சிறுமி தனது பெற்றோருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து, 

நேற்றைய தினம் சனிக்கிழமை பெற்றோரால் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. 

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , சிறுமியின் பெரிய தந்தையை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்து உள்ளதுடன் , சிறுமியை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு