யாழ்.அல்லைப்பிட்டியில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை! ஒருவர் கைது..

ஆசிரியர் - Editor I
யாழ்.அல்லைப்பிட்டியில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை! ஒருவர் கைது..

யாழ்.அல்லைப்பிட்டி பகுதியில் சிறுமிகளை பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றச்சாட்டில் 25 வயதான சந்தேகநபரை ஊர்காவற்துறைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது, அண்மையில் யாழ்.போதனாவில் அதிகளவு மாத்திரைகளை உட்கொண்டு நிலையில் அல்லைப்பிட்டியினை சேர்ந்த 11 வயது சிறுமி தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டார்.

இந்நிலையில் அவருக்கு வழங்கப்பட்ட உளவள சிகிச்சையின் பொழுது அல்லைப்பிட்டி வெண்புறவி நகர்பகுதியினை சேர்ந்த 25 வயதான இளைஞர் தொடர்பில் சிறுமி தகவல் வெளியிட்டாள்.

தான் உட்பட்ட ஐந்து சிறுமிகளுக்கு தொலைபேசி மூலம் தகாத குறுஞ்செய்திகளை அனுப்பிய நிலையில் பாலியல் தொந்தரவுக்குள்ளாக்கிய நிலையில் தான் தற்கொலைக்கு முயன்றதாக வாக்குமூலம் வழங்கியிருந்தார்.

இந்நிலையில் வைத்தியசாலை மூலம் ஊர்காவற்றை பொலிசாருக்கு தகவல் வழங்கபட்ட நிலையில் ஊர்காவற்றை பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர் .

இதனையடுத்து சம்பவத்துடன் தொடர்புபட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டாவது சிறுமியினை சட்ட வைத்திய அதிகாரி முன் நேற்று முன்தினம் பொலிசார் முற்படுத்தினர்.

குறித்த சிறுமி வழங்கிய வாக்குமூலத்திற்கு அமைவாக பாலியல் தொந்தரவை மேற்கொண்ட சந்தேகநபரை பொலிசார் கைது செய்தனர்.

மேலும்  இன்னொரு சிறுமியும் குறித்த சந்தேகநபரால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகிய நிலையில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு