வெளிநாட்டில் வேலை பெற்றுத்தருவதாக கூறி யாழ்ப்பாண இளைஞனிடம் 25 லட்சம் சுருட்டிய இத்தாலி வாசி..

ஆசிரியர் - Editor I
வெளிநாட்டில் வேலை பெற்றுத்தருவதாக கூறி யாழ்ப்பாண இளைஞனிடம் 25 லட்சம் சுருட்டிய இத்தாலி வாசி..

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரை வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி சுமார் 25 லட்சம் ரூபாய் பணத்தை சுருட்டிய நபர் தொடர்பில் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வெளிநாட்டுக்கு அனுப்புவதாக இத்தாலியில் வசிக்கும் யாழ்ப்பாணம் வலிகாமத்தை சேர்ந்த நபர் ஒருவர் தரகர் மூலம் குறித்த இளைஞனை அணுகியுள்ளனர்.

இளைஞனுடன் சகல விவரங்களையும் பெற்றுக்கொண்ட தரகர் போலி விசாவினை இத்தாலியில் வசிக்கும் நபர் மூலம் பெற்றுக்கொண்டு இளைஞனுக்கு வழங்கியுள்ளனர்.

குறித்த வீசாவினை தூதரகத்திடம் காண்பித்தபோது குறித்த வேலை வாய்ப்புக்கான வீசா போலியானது என உறுதிப்படுத்தப்பட்டது.

விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த பாதிக்கப்பட்ட இளைஞன் இத்தாலியில் வாசிக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபரே பிரதான சூத்திரதாரி.

இவர் முல்லைத்தீவு பெண் ஒருவரை முதலில் திருமணம் செய்து இரு பிள்ளைகள் இருப்பதாகவும் பின்னர் அவர்களை கைவிட்டு பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த யுவதி ஒருவரை மறுமணம் செய்திருப்பதாகவும் தெரிவித்தார்.

குறித்த நபர் என்னைப் போன்ற பலரிடம் வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி பல கோடி ரூபாய்களை பெற்றுள்ளதாகத் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு